Tuesday, 6 May 2014

List of Languages in the 8th Schedule of the Indian Constitution

2. Bengali-----------------WestBengal
3. Bodo-------------------Assam,West Bengal
4. Dogri-------------------Jammu,Himachal Pradesh
5. Gujarati----------------Gujarat
6. Hindi-------------------Most parts of Northern States
7. Kashmiri---------------Jammuand Kashmir
8. Kannada--------------- Karnataka
9. Konkani----------------Goa and parts of Karnataka
10. Malayalam-----------Kerala
11. Manipuri-------------Manipur
12. Marathi--------------Maharashtra
13. Maithili--------------Parts of Bihar
14. Nepali---------------Sikkim and parts of West Bengal
15.Odia-----------------Odisha
16. Punjabi--------------Punjab,Chandigarh
17. Sanskrit-------------Uttarakhand
18. Sindhi--------Scattered in Gujarat, Rajasthan and Maharashtra
19. Santhali------Spoken by Santhal tribe in Jharkhand,Bihar, W.B.
20. Tamil----------------Tamilnadu, Puducherry
21. Telugu---------------Andhr Pradesh
22. Urdu-----------------Northern



தமிழகத்தில் உள்ள 36996 தொழிற்சாலைகளில் அம்மாநிலத்தை விட 5 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர். குஜராத்தை விட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தமிழகத்தில் குறைவு. அம்மாநிலத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவிகிதம் அதிகரிப்பு. ஆனால் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 29 சதவிகிதம் குறைவு. உணவு உற்பத்தியில் குஜராத்தை விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது
(1) When did Goa become a state?
(A) 26 January 1986
(B) 30 May 1987
(C) 11 July 1992
(D) 19 December 1997
Ans. (B) 30 May 1987
(2) Who is the first President of the United States of America?
(A) George Washington
(B) Thomas Jefferson
(C) James Monroe
(D) John Adams
Ans. (A) George Washington
(3) Who won the Football World Cup in 1982?
(A) Brazil
(B) Argentina
(C) Germany
(D) Italy
Ans. (D) Italy
(4) Which country has 11 official languages?
(A) India
(B) USA
(C) Canada
(D) South Africa
Ans. (D) South Africa
(5) Who won the Olympic Gold Medal for hockey in 1980 Moscow Olympics?
(A) India
(B) UK
(C) USA
(D) USSR
Ans. (A) India
6) Which city was the summer capital of India during British Rule?
(A) Nainital
(B) Darjeeling
(C) Simla
(D) Ooty
Ans. (C) Simla
7) Lok Saha is the news paper of
(A) Madhya Pradesh
(B) Uttar Parades
(C) Maharashtra
(D) Rajasthan
Ans. (C) Maharashtra
8) ‘Duesch Mark’ is the currency of?
(A) Poland
(B) Netherlands
(C) Germany
(D) Ghana
Ans. (C) Germany
9) Who was the first Prime Minister of India to head a minority government?
((A) Morarji Desai
((B) Rajiv Gandhi
((C) Chaudhury Charan Singh
((D) H.D. Deve Gowda
Ans. (C) Chaudhury Charan Singh

10) Which of the following is known as plastic money?
(A) bearer cheques
(B) credit cards
(C) demand drafts
(D) gift cheques
Ans. (B) credit cards


'எனது வலது கை' என்று பாரதிதாசனால் அழைக்கப்பட்டவர்?ட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

1. ஐக்கிய நாடுகள் அமைப்பு / United Nations Organisation ------ நியூயார்க்

2. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் 'நிதியம் / United Nations Childrens' Fund (UNICEF) ------ நியூயார்க்

3. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் / United Nations Population Fund (UNFPA) ------- நியூயார்க்

4. வர்த்தக மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாடு / United Nations Population Fund (UNCTAD) ------- ஜெனீவா

5. உலக சுகாதார அமைப்பு / World Health Organisation ------ ஜெனீவாவில்

6. சர்வதேச தொழிலாளர் அமைப்பு / International Labour Organisation ------ ஜெனீவாவில்

7. சர்வதேச செஞ்சிலுவை குழு / International Committee of the Red Cross ------ ஜெனீவா

8. உலக வர்த்தக அமைப்பு / World Trade Organisation ------ ஜெனீவாவில்

9. உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு / World Meteorological Organisation ------ ஜெனீவா

10. உலக நுண்ணறிவு சொத்தின் அமைப்பு / World Intellectual Property Organization ----- ஜெனீவா

11. சர்வதேச நியமங்கள் அமைப்பு / International Standards Organisation ----- ஜெனீவா

12. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு / United Nations Educational Scientific and Cultural Organisation (யுனெஸ்கோ) ------ பாரிஸ்

13. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு / Organisation for Economic Cooperation and Development (OECD) ------ பாரிஸ்

14. ஐக்கிய நாடுகள் சபையின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு / United Nations Industrial Development Organization (UNIDO) -------------- வியன்னா

15. சர்வதேச அணுசக்தி முகமை / International Atomic Energy Agency -------- வியன்னா

16. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு / Organisation of Petroleum Exporting Countries (OPEC) ------- வியன்னா

17. சர்வதேச நாணய நிதியம் / International Monetary Fund (IMF) ------------- வாஷிங்டன் DC

18. உலக வங்கி / World Bank ----- வாஷிங்டன் DC

19. சர்வதேச மன்னிப்பு சபை / Amnesty International --------- லண்டன்

20. சர்வதேச கடல்சார் அமைப்பு / International Maritime Organisation -------- லண்டன்

21. காமன்வெல்த் நாடுகள் / Commonwealth of Nations ----------- லண்டன்

22. சர்வதேச நீதிமன்றத்தின் / International Court Of Justice ------ ஹேக்

23. யுனிவர்சல் தபால் ஒன்றிம் / Universal Postal Union ----- பேரனே

24. உணவு மற்றும் விவசாய அமைப்பு / Food and Agricultural Organisation (FAO) -------- ரோம்

25. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு / North Atlantic Treaty Organisation (நேட்டோ) --------- பிரஸ்ஸல்ஸ்

26. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை / International Renewable Energy Agency ------------ அபுதாபி (அமீரகம்)

27. தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு / South Asian Association for Regional Cooperation --------- கட்மாண்டு

28. தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் / Association of South East Asian Nations (ASEAN) ---------- ஜகார்த்தா

29. ஆசியா பசிபிக் பொருளாதார அரங்கில் Asia Pacific Economic Forum (APEC) -------- சிங்கப்பூர்

30. பிராந்திய ஒத்துழைப்பிற்கான இந்திய பெருங்கடல் ரிம் சங்கம் / Indian Ocean Rim Association for Regional
Cooperation ---------- Ebene , மொரிஷியஸ்

31. இரசாயன ஆயுதங்களை தடை அமைப்பு / Organisation for the Prohibition of Chemical Weapons ------------ ஹேக் , நெதர்லாந்து


உலகளாவிய அளவில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களின் சமூக மேம்பாடு தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

உணவு, உறைவிடம், குடிநீர், மருத்துவ சிகிச்சை, குடிநீர், கழிவுநீர் அகற்றல், கல்வியறிவு, பொது அறிவு, தகவல் அறியும் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பு, தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நிறுவனம் 132 நாடுகளில் ஆய்வு நடத்தியது.

இதன் அடிப்படையில், சமூக முன்னேற்றம்-2014 என்ற தலைப்பில் ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்தையும், அதற்கு அடுத்த இடங்களை சுவிட்ஸர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் பெற, பொருளாதார வளர்ச்சியில் 94-வது இடத்தில் உள்ள இந்தியா, சமூக முன்னேற்றத்தில் 102-வது இடத்தை பிடித்து, மிகவும் பின்தங்கியுள்ளது.

இந்தப் பட்டியலில், ஆசியா கண்டத்தில் முதலிடத்தை பிடித்த இலங்கை 85-வது இடத்திலும், பாகிஸ்தான் 124-வது இடத்திலும் உள்ளது.

‘பிரிக்ஸ்’ நாடுகள் என்றழைக்கப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளில் 100-க்கும் குறைவான இடத்தை பிடித்த ஒரே நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் 46-வது இடத்தையும், சீனா 90-வது இடத்தையும் பெற்றிருக்கும் நிலையில், இந்தியா 102-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடைசி இடத்தை 'சாட்' பிடித்துள்ளது.



 மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண் கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப் பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.

சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.

ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரி பொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன் படுகிறது. மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.

"லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.

பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.



பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது: 20-வது நிமிடத்தில் நிலைநிறுத்தப்படும்

பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 5.14 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஏவப்பட்ட 20-வது நிமிடத்தில் புவிச்சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 58 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. ராக்கெட்டை ஏவுவதற்கான சோதனைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக் கோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்ணில் ஏவப்பட்டவுடன் சுமார் 20 நிமிடங்களில் பூமியில் இருந்து குறைந்தபட்சமாக 284 கி.மீ. தொலைவும், அதிகபட்சமாக 20,652 கி.மீ. தொலைவும் கொண்ட புவிச்சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக் கோள் 1,500 கி.மீ. சுற்றளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் கண்காணிக்கும். தரைவழி, வான்வழி, கடல்வழிப் போக்கு வரத்தை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணிக்கவும், உரிய நேரத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள் ளவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்தது.

Which place

Which place is known as Hi-Tech City = Hyderabad
Which place is known as Manchester of South India = Coimbatore
Which place is known as Deccan Queen = Pune
Which place is known as City of weavers = Panipat
Which River is known as Old Ganga = Godavari
Which River is known as Dakshin Ganga = Kaveri
Which state is known as Milk Pail of India = Haryana
Which place is known as Gardan city of India = Bangalore
Which place is known as Sapce city of India = Bangalore
Which place is known as Electronic city of India = Bangalore
Which Indian place is known as Pensioners' Paradise = Bangalore
Which state is known as Jewel of India = Manipur
Which Indian place is known as Scotland of the east = Shillong
Which place is known as Temple city of India =>> Bhuvaneswar
Which place is known as Cathedral city of India =>> Bhuvaneswar

GK

1. ஒரு தடவை கூட
லோக்சபாவிற்கு செல்லாத இந்திய
பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.
2. உலக சுற்றுச்சூழல் தினம்
எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5.
3. மனித உடலில் வியர்க்காத
பகுதி எது?
உதடு.
4. ஒரு ஹெக்டார்
என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.
5. வேர்க்கடலையின் அறிவியல்
பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா.
6. பஞ்ச தந்திர
கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.
7. வருடத்தின் ஒரே நாளில் 24
மணிநேரத்தில் பகலும்,
இரவும் சரியாக 12 மணிநேரம்
மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.
8. மனித தலையில் உள்ள மொத்த
எலும்புகள் எத்தனை?
22 .
9. ஈக்களின் சுவை உணர்
உறுப்பு எது?
நாக்கு.
10. தமிழில் வெளிவந்த முதல்
வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.
11. பாலில் உள்ளதை விட அதிக
கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.
12. கவிஞர் கண்ணதாசன் பாடல்
எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.
13. தமிழில் முதல் நாவல்
எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
அவர் 1879ல் எழுதிய 'பிரதாப
முதலியார் சரித்திரம்'தான் தமிழில்
முதல் உரைநடை வடிவ நாவல்.
14. நமது இந்திய நேரம் எந்த
இடத்தினை அடிப்படையாய்
வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.
15) பகவத்கீதையில் உள்ள
அதிகாரங்கள் ?
A. 8
B. 12
C. 18
D. 108
Answer : C.
16) சரியான விடையைக் காண்க
A. கன்னியாகுமரி : விவேகனந்தர்
B. குறிஞ்சி சாலை : ஸ்ரீ அரவிந்தர்
C. ஹனுமான் மந்திர் : காந்திஜி
D. சபர்மதி ஆசிரமம் : ஸ்ரீ
ராமகிருஷ்ண பரமஹம்சர்
Answer : A.
17) கதக் எனும் நடனம்
எங்கு முதன்மையான நடனமாக
கருதப்படுகிறது?
A. வட இந்தியா
B. கேரளா
C. ஒடிஸ்ஸா
D. கர்நாடகா
Answer : A.
18) ஆசியாவின் மிக நீண்ட
மலைத்தொடர்கள்
A. குன்லுன் மலைத்தொடர்கள்
B. இமய மலைத்தொடர்கள்
C. இந்துகுஷ் மலைத்தொடர்கள்
D. கின்கன் மலைத்தொடர்கள்
Answer : B.
19) இரத்தத்தில் சர்க்கரையின்
அளவு இதனால் அதிகரிக்கப்படுக
ிறது
A. FSH
B. TSH
C. இன்சுலின்
D. குளுக்காஹான்
Answer : D.
20) கீழே குறிப்பிட்டுள்ளவற்றின்
எந்தப்பட்டியலின் மேல் மத்திய
மற்றும் மாநில அரசுகள்
சட்டமியற்றலாம்?
A. மாநிலப் பட்டியல்
B. மத்தியப் பட்டியல்
C. பொதுப் பட்டியல்
D. இவை அனைத்தும்
Answer : C.
21)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
சார்ந்த மாவட்டம்
A. தஞ்சாவூர்
B. மதுரை
C. சிவகங்கை
D. செங்கற்பட்டு
Answer : C.
22) பின்வருபவர்களில்
முதன்முதலில் இந்தியப் போர்களில்
பீரங்கியைப் பயன்படுத்தியவர்
யார்?
A. பாபர்
B. இப்ராஹீம் லோடி
C. ஷெர்ஷா
D. அக்பர்
Answer : A.
23) டெசிபல் என்பது இதை அளக்க
உதவும் அலகு
A. ஒளியின் அளவு
B. ஒலியின் அளவு
C. கதிர்வீச்சின் அளவு
D. வெப்பத்தின் அளவு
Answer : B.
24) இந்தியப் பொருளாதாரத்
திட்டமிடுதலில் சேர்க்கப்படாத
நோக்கம் எது?
A. தன்னிறைவு
B. தொழில்துறை வளர்ச்சி
C. வேலைவாய்ப்பு உருவாக்குதல்
D. மக்கள்தொகை வளர்ச்சி
Answer : D.
25) தமிழ் நாட்டில் அ. இ.அ.
தி.மு .க . முதன்முதலில்
ஆட்சிக்கு வந்த ஆண்டு
A. 1972
B. 1977
C. 1982
D. 1984
Answer : B.
26) எந்தப் பிரிவின் கீழ்
நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப
்படுகிறது?
A. விதி-356
B. விதி-360
C. விதி-352
D. விதி -350
Answer : B.
27) சதுப்பு நிலக் காடுகள்
காணப்படுவது
A. கடற்கரை மற்றும் டெல்டாப்
பகுதிகளில்
B. மலைச்சரிவுகள் மற்றும்
பள்ளத்தாக்குகள்
C. பீடபூமிகள் மற்றும்
பள்ளத்தாக்குகளில்
D. சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்
Answer : A.
28) 1 டிகிரி தீர்க்க ரேகையைக்
கடக்க பூமி எடுத்துக்கொள்ளும்
நேரம்
A. 5 நிமிடம்
B. 24 மணி
C. 4 நிமிடம்
D. 2 நிமிடம்
Answer : C.
29) தமிழ் நாடு அதிக மழைப்
பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
A. ஜனவரி - மார்ச்
B. ஏப்ரல்- ஜுன்
C. ஜூலை- செப்டம்பர்
D. அக்டோபர் -டிசம்பர்
Answer : D.
30) LCD என்பதன் விரிவாக்கம்
என்ன?
A. Liquid Crystal Display
B. Light Controlled Decoder
C. Laser Controlled Device
D. இவற்றுள் எதுவும் இல்லை
Answer : A.
31) கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட
எண்ணைக் கண்டுபிடிக்கவும்
5, 7, 9, 17, 23, 37
A. 5
B. 9
C. 37
D. 23
Answer : B.
32) முதல் அரசியலமைப்பு சட்ட
திருத்தம் நடந்த ஆண்டு
A. 1950
B. 1951
C. 1952
D. 1953
Answer : B.
33) ஜனாதிபதி பதவிக்கான
தேர்தலை நடத்துபவர் யார்?
A. மக்களவை சபாநாயகர்
B. பாராளுமன்றத்தின்
பொதுச்செயலர்
C. இந்தியத் தலைமை நீதிபதி
D. இந்தியத் தேர்தல் ஆணையம்
Answer : D.
34) மன்னர் திருமலை நாயக்கரின்
தலைநகர் எது?
A. உறையூர்
B. மதுரை
C. தஞ்சாவூர்
D. பூம்புஹார்
Answer : C.
35) இரண்டு மதத்தினைச் சார்ந்த
ஆண் , பெண் இருவரும் கீழ்க்கண்ட
சட்டப்படி திருமணம்
செய்துகொள்ளலாம்
A. இந்து திருமணச்சட்டம்
B. சிறப்பு திருமணச்சட்டம்
C. கிறிஸ்துவ திருமணச்சட்டம்
D. இஸ்லாமிய திருமணச்சட்டம்
Answer : B.
36) 3 மணி நேரம்
ஒரு புகைவண்டி பயணம்
செய்கிறது . முதல் மணியில் , 10
கி.மீ ./ மணி என்றும், மீதமுள்ள 2
மணியில் , 25 கி. மீ ./
மணி என்றும் பயணிக்கிறது . அதன்
சராசரி வேகம் என்ன?
A. 10 கி. மீ ./ மணி
B. 15 கி. மீ ./ மணி
C. 20 கி. மீ ./ மணி
D. 25 கி. மீ ./ மணி
Answer : C.
37) 5 மாம்பழம் மற்றும் 4
ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின்
விலையும் , 3 மாம்பழம் மற்றும் 7
ஆரஞ்சுப்பழம்
ஆகியவற்றின் விலையும்
ஒன்றெனில் , ஒரு மாம்பழம்
மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம்
ஆகியவற்றின் விலைகளின்
விகிதம் என்ன?
A. 4:3
B. 1:3
C. 3:2
D. 5:2
Answer : C.
38) ஒரு கோபுரத்தின் 100 மீ .
தொலைவிலிருந்து அதன்
உச்சிக்கான ஏற்ற கோணம் 45°
எனில், கோபுரத்தின்
உயரம் என்ன?
A. 25 மீ .
B. 50 மீ .
C. 100 மீ .
D. 200 மீ .
Answer : C.
39) பல்லவ மன்னர்களின் சித்திரகார
புலி என்ற
அடைமொழியை பெற்றவர்
A. மகேந்திரவர்மன்
B. ராஜசிம்மன்
C. மாமல்லன்
D. நந்திவர்மன்
Answer : A.
40) மதுரா விஜயம் என்ற நூலில்
ஆசிரியர்
A. காங்கா தேவி
B. காரைக்கால் அம்மையார்
C. பரஞ்சோதி
D. மாங்குடி மருதனார்
Answer : A.
41) இந்தியாவின்
தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்
உள்ள இடம்
A. சென்னை
B. மும்பை
C. ஹைதராபாத்
D. பெங்களூர்
Answer : D.
42) இந்து என்னும் ஆங்கில
நாளிதழைத் தோற்றுவித்தவர்
A. ஜி.சூப்பிரமணியஐயர்
B. ரா.வெங்கடராஜுலு
C. ஜெகன்நாத் ஆச்சாரியார்
D. இராஜகோபாலாச்சாரி
Answer : A.
43) ஊக்கப்படுத்தப்பட்ட
கரியானது அசுத்த கரைசல்களில்
உள்ள நிறமிப்
பொருட்களை நீக்குவதற்கு
பயன்படுகிறது.
அவ்வாறு செயல்படுவதர்க்க
ு காரணம்.
A. ஆக்ஸிகரணம்
B. ஒடுக்கவினை
C. மேற்ப்பரப்பில் உறுஞ்சிதல்
D. சாயம் வெளுத்தல்
Answer : D.
44) கீழ்க்கண்ட வாக்கியங்களில்
குறியீடுகளைப்
பயன்ப்படுத்தி சரியான விடையைத்
தேர்வு செய் :
கோட்பாடு (A): பேக்கலைட்
ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும்.
காரணம் (R): இறுகிய பிளாஸ்டிக்
குகள் வெப்பப்படுத்தும்
போது இறுகிய
நிலையை அடைந்துவிடுகின்றன .
கீழ்க்காணும் குறியீடுகள் மூலம்
சரியான விடையைத்
தேர்ந்தெடுக்க :
A. (A) மற்றும் (R) இரண்டும்
சரியானவை மற்றும் (R)
என்பது (A)- ன் சரியான விளக்கம் .
B. (A) மற்றும் (R) இரண்டும்
சரியானவை ஆனால் (R)
என்பது (A)- ன் சரியான விளக்கம்
அல்ல .
C. (A) சரி ; ஆனால் (R) தவறு.
D. (A) தவறு ; ஆனால் (R) சரி.
Answer : A.
55) அணுக்கரு ஒன்றினுள்
இருப்பது
A. புரோட்டன்க்கள் மற்றும்
நியூட்ரான்கள்
B. புரோட்டன்க்கள் மற்றும்
எலெக்ட்ரான்கள்
C. நியூட்ரான்கள் மற்றும்
எலெக்ட்ரான்கள்
D. நியூட்ரான்கள் மட்டும்
Answer : A.
56) சமதள
ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன்
1 மீ / விநாடி வேகத்துடன் நகரும்
போது , நகரும் மனிதனின்
பிம்பம் அவனை நோக்கி வரும்
சார்பு திசை வேகம்
A. 0.5 மீ /விநாடி
B. 1 மீ /விநாடி
C. 2 மீ /விநாடி
D. 3 மீ /விநாடி
Answer : B.
57) தமிழகத்தில் பல்லவர்
காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட
மன்னர் காலத்தில்
சாதிமுறை தீவிரமாக
பின்பட்டபட்டது
A. விஷ்ணு கோபா
B. முதலாம் மகேந்திரவர்மன்
C. முதலாம் மகேந்திரவர்மன்
D. இரண்டாம் நந்திவர்மன்
Answer : C.
58) இந்தியாவிலுள்ள மிகவும்
முக்கியமான சிறுதொழில் எது?
A. துணிமணிகள்
B. சணல்
C. நகைகள்
D. கைத்தறிகள்
Answer : D.
59) இந்தியாவில்
பருத்தி துணி உற்பத்தி செய்யும்
ஆலைகள் அதிகமாக உள்ள
மாநிலம் எது?
A. குஜராத்
B. மேற்கு வங்காளம்
C. மகாராஷ்டிரம்
D. தமிழ்நாடு
Answer : D.
60) இந்தியாவில் முதல் ரப்பர்
தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது ?
A. தமிழ் நாடு
B. கோவா
C. கேரளா
D. கர்நாடகா
Answer : C.
61) 1980 ஆம் ஆண்டில் தந்தையின்
வயது தன் மகனின் வயதைப் போல்
8 மடங்காகும் , 1988 ஆம் ஆண்டில்
தந்தையின் வயது 1980 ஆம்
ஆண்டில் மகனின்
வயது எவ்வளவோ அதைப்போல்
10 மடங்காகும் எனில் , 1990
ஆம் ஆண்டில் மகன் ,
தந்தை ஆகியோரின்
வயது முறையே
A. 16, 58 ஆண்டுகள்
B. 15, 50 ஆண்டுகள்
C. 14, 42 ஆண்டுகள்
D. 13, 34 ஆண்டுகள்
Answer : C.
62) இந்திய தேசத்தின் மூவர்ணக்
கொடியை தயாரித்தவர்
A. காந்திஜி
B. மோதிலால் நேரு
C. சரோஜினி நாயுடு
D. அன்னிபெசென்ட்
Answer : A.
63) ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்
A. பல்லவ வம்சம்
B. சோழ வம்சம்
C. பாண்டிய வம்சம்
D. சேர வம்சம்
Answer : C.
64) தேசிய மாசு தடுப்பு தினம்
கடைப்பிடிகப்படும் நாள்
A. ஜூன் 5 ஆம் தேதி
B. அக்டோபர் 3 ஆம் தேதி
C. ஆகஸ்ட் 20 ஆம் தேதி
D. டிசம்பர் 2 ஆம் தேதி
Answer : D.
65) உலகின் சர்க்கரைக் கிண்ணம்
v:shapes="_x0000_i1025">
A. கியூபா
B. ஜாவா
C. இந்தியா
D. சீனா
Answer : A.
66) கேசரி என்பது
A. சமூக சீர்திருத்தத்திற்கான
திலகரால் ஆரம்பிக்கப்பட்ட
அமைப்பு
B. எஸ்.என் .
பானர்ஜிக்கு சொந்தமான
ஒரு ஆங்கில பத்திரிகை
C. ஒரு மராத்திய பத்திரிகை
D. இவை ஏதுமில்லை
Answer : C.
67) பருத்தி விளைவதற்கு ஏற்ற
மண்
A. செம்மண்
B. மலை மண்
C. கரிசல் மண்
D. வண்டல் மண்
Answer : C.
68) தேயிலை அதிகமாக
உற்பத்தி செய்யும் மாநிலம்
v:shapes="_x0000_i1031">
A. தமிழ்நாடு
B. அஸ்ஸாம்
C. கர்நாடகா
D. கேரளா
Answer : B.
69) பட்டியல் I-ஐ பட்டியல் II-
உடன் பொருத்தி,
கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான
பதிலைத் தேர்ந்தெடு :
a. சித்தரஞ்சன் - 1. ரயில் எஞ்சின்
ஆலை,
b. நேபா நகர் - 2. ரயில்
பெட்டி ஆலை,
c. மும்பை - 3. அச்சு காகித ஆலை,
d. ஜாம்ஷெட்பூர் - 4.
பருத்தி நெசவு ஆலை, 5. -
இரும்பு எஃகு ஆலை v:shapes="_x000
0_i1033">
A. (a,1),(b,3),(c,4),(d,5)
B. (a,1),(b,4),(c,3),(d,5)
C. (a,2),(b,3),(c,4),(d,1)
D. (a,5),(b,2),(c,3),(d,1)
Answer : A.
70) இந்தியாவின் மான்செஸ்டர்
மற்றும் தென் இந்தியாவின்
மான்செஸ்டர் என்பது
A. டெல்லி மற்றும் சென்னை
B. கொல்கத்தா மற்றும் சென்னை
C. பெங்களூர் மற்றும்
கோயம்புத்தூர்
D. மும்பை மற்றும் கோயம்புத்தூர்
Answer : D.
71) புத்தர் எங்கு முதன் முதலில்
போதித்தார்?
A. சாரநாத்
B. சாஞ்சி
C. கயா
D. வாரணாசி
Answer : A.
72) குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த
சிறந்த கணித
மேதை v:shapes="_x0000_i1039">
A. ஆரியபட்டர்
B. வராகமிகிரா
C. பிரம்ம குப்தர்
D. பாணப்பட்டர்
Answer : A.
73) வாதாபி கொண்டான் என்ற
பட்டத்தை அடைந்தவர்
v:shapes="_x0000_i1041">
A. பரமேஸ்வரவர்மன்
B. முதலாம் மகேந்திரவர்மன்
C. முதலாம் நரசிம்மவர்மன்
D. சிம்ம விஷ்ணு
Answer : C.
74) அஷ்டதிக்கஜங்கள் இருந்த
பேரரசரின் அவை v:shapes="_x000
0_i1043">
A. அச்சுதராயர்
B. கிருஷ்ண தேவராயர்
C. ராமராயர்
D. சதாசிவ ராயர்
Answer : B.
75) முகமது கஜினி இந்தியாவின்
மீது படையெடுத்து வந்ததற்கு முக்கிய
காரணம் என்ன?
v:shapes="_x0000_i1084">
A. இஸ்லாம் சமயத்தைப்
பரப்புவதற்கு
B. அரசை விரிவுபடுத்த
C. இந்தியாவின் செல்வத்தைக்
கொள்ளையடித்துச் செல்ல
D. பொழுது போக்குக்காக
Answer : C.
76) தமிழ்நாட்டில்
இரயத்வாரி முறையைக்
கொண்டு வந்தவர்
A. காரன்வாலிஸ் பிரபு
B. டல்ஹௌசி பிரபு
C. சர் தாமஸ் மன்றோ
D. மேயோ பிரபு
Answer : C.
77) அணுக்கரு உலையில்
கட்டுப்படுத்தும் கழிகளாக
பயன்படுத்தப்படுவது
A. காட்மியம்
B. போரான்
C. ஹேப்னியம்
D. இவை அனைத்தும்
Answer : D.
78) 20 மீ .வி -1 திசைவேகத்தில்
செல்லும் 500 கிலோ கிராம்
நிறை கொண்ட வண்டி 50 மீ ஆரம்
கொண்ட
வளைவான பாதையில்
திரும்புவதற்கு தேவையான மைய
நோக்கு விசை v:shapes="_x000
0_i1090">
A. 4000N
B. 5000N
C. 200N
D. 1250N
Answer : A.
79) பின்வருவனவற்றுள்
எது சரியாக பொருந்தியுள்ளது ?
v:shapes="_x0000_i1092">
A. அம்மோனியா -
புறவேற்றுமை தன்மையுடையது
B. கந்தக அமிலம் - நீர் நீக்கும்
காரணி
C. கந்தக டை ஆக்சைடு - ஹேபர்
முறை
D. கந்தகம் - இலேசான தனிமம்
Answer : B.
80) AB,CD என்பன வட்ட
மையத்திலிருந்து சம
தூரத்திலுள்ள நாண்கள். AB 6
செ .மீ . எனில் CD- ன் மதிப்பு
என்ன?
A. 3 செ. மீ .
B. 6 செ. மீ .
C. 9 செ. மீ .
D. 12 செ .மீ .
Answer : B.
81) ஒரு நேர் வட்டக் கூம்பின் ஆரம்
4 செ .மீ சாயுயரம் 6 செ .மீ எனில்
அதன் வளைபரப்பு என்ன ?
A. 12π செ .மீ ²
B. 12 செ .மீ ²
C. 24π செ .மீ ²
D. 24 செ .மீ ²
Answer : C.
82) கீழே கொடுக்கப்பட்ட
புள்ளிகளில் எது 3x+4y≤7 இல்
அமைந்துள்ளது? v:shapes="_x000
0_i1098">
A. (1,1)
B. (1,2)
C. (2,1)
D. (0,2)
Answer : A.
83) sinθ=cosθ எனில் tanθ= ?
A. 0
B. 1
C. √2
D. √3
Answer : B.
84) சமன்பாடு 2x²-11x-6=0 ன்
ஒரு மூலம் 6 எனில்
மற்றொரு மூலம் v:shapes="_x000
0_i1102">
A. 1/2
B. -1/2
C. -6
D. 1/6
Answer : B.
85) வளிமண்டலமில்லையெனில்
ஆகாயத்தின் நிறம்
A. நீலம்
B. வெள்ளை
C. சிவப்பு
D. கருப்பு
Answer : D.
86) சூரியனில் ஆற்றல்
எவ்வாறு உருவாகிறது?
A. அணுக்கரு பிளவு
B. அணுக்கரு இணைவு
C. வாயுக்கள் எரிவதால்
D. ஹைட்ரஜன் உள்ளதால்
Answer : B.
87) மத்திய நெல்
ஆராய்ச்சி நிறுவனம்
எங்கு உள்ளது ?
A. கொல்கத்தா
B. கட்டாக்
C. பெங்களூர்
D. மைசூர்
Answer : B.
88) அதிகமாக உபயோகப்படும்
பென்சிலினின்
எதிர்ப்பு பொருளை உருவாக்குவது
A. ஆல்கா
B. பாக்டீரியம்
C. பூஞ்சை
D. தாவரம்
Answer : C.
89)
துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது
A. டென்னிஸ்
விளையாட்டு வீரருக்கு
B. கிரிக்கெட்
விளையாட்டு வீரருக்கு
C. விளையாட்டு பயிற்சியாளருக்கு
D. ஹாக்கி விளையாட்டு வீரருக்கு
Answer : C.
90) பட்டியல் I-ஐ பட்டியல் II-
உடன் பொருத்தி,
கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான
பதிலைத் தேர்ந்தெடு :
a. கதக்களி - 1. தமிழ்நாடு ,
b. ஒடிசி - 2. ஆந்திர பிரதேசம்,
c. குச்சிபுடி - 3. கேரளா ,
d. பரத நாட்டியம் - 4. ஒரிசா
A. (a,3),(b,4),(c,2),(d,1)
B. (a,3),(b,2),(c,1),(d,4)
C. (a,4),(b,3),(c,2),(d,1)
D. (a,2),(b,3),(c,1),(d,4)
Answer : A.
91) குடியரசுத் தலைவரை குற்றம்
சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம்
செய்யலாம். அதற்கான
தீர்மானத்தை
A. மக்களவையில்
கொண்டு வரலாம்
B. இந்திய உச்ச நீதிமன்றத்தில்
கொண்டு வரலாம்
C. பாராளுமன்றத்தின்
இரு அவைகளிலும்
கொண்டு வரலாம்
D. அமைச்சரவையில்
கொண்டு வரலாம்
Answer : C.
92) மத்திய
அரசு தேர்வாணையத்தின்
அங்கத்தினர்கள்
A. மக்களால் தேர்ந்தெடுக்கப்
படுகிறார்கள்
B. பாராளுமன்றத்தால்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
C. குடியரசுத் தலைவரால்
நியமிக்கப்படுகிறார்கள்
D. அமைச்சரவைக் குழுவால்
நியமிக்கப்படுகிறார்கள்
Answer : C.
93) பகல் மற்றும் இரவு இதனால்
ஏற்படுகின்றது
A. புவி சூரியனை வலம்
வருவதால்
B.
புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்
C. புவியின் ஈர்ப்பு விசை
D. இவை ஏதுமில்லை
Answer : B.
94) தென்
மேற்கு பருவக்காற்று அதிக மழைப்
பொழிவை கொடுப்பது
A. மேற்கு கடற்கரை
B. கிழக்கு கடற்கரை
C. தார் பாலைவனம்
D. மால்வா பீடபூமி
Answer : A.
95) இதயத்திலிருந்து
இரத்தத்தை எடுத்துச் செல்லும்
இரத்த நாளங்கள் v:shapes="_x000
0_i1025">
A. தமனி
B. சிரை
C. தந்துகிகள்
D. பெருஞ்சிறை
Answer : A.
96) ஓர் தாவர செல்
விலங்கு செல்லில்
இருந்து வேறுபடுகிறது ?
A. குரோமோசோம்
B. செல்சுவர்
C. செல்சவ்வு
D. உட்கரு
Answer : B.
97) A={2,4,8}; B={1,2,6,8}, c=
{1,5,6,8} எனில் {A-B}∩{A-C}
காண்க.
A. {1,8}
B. {2,4}
C. {2}
D. {4}
Answer : B.
98) ஒரு கட்டிடத்தின்
உச்சியிலிருந்து கீழே உள்ள
ஒரு பொருளைக் காண , இறக்க
கோணம் 30° எனில்
பொருளிலிருந்து கட்டிடத்தின்
உச்சியைக் காணும்
போது ஏற்படும் ஏற்ற கோணம்
யாது ?
v:shapes="_x0000_i1031">
A. 30°
B. 45°
C. 60°
D. 90°
Answer : C.
99) தேசிய கொடியின் நீள அகல
விகிதாச்சாரம் v:shapes="_x000
0_i1033">
A. 3:2
B. 5:3
C. 2:1
D. 1:4
Answer : A.
100) 12/5, 11/4, 10/3, 9/2
ஆகியவற்றுள் எந்த எண்
மிகச்சிறியது ?
A. 12/5
B. 11/4
C. 10/3
D. 9/2
Answer : A.
101) குருதியின் pH மதிப்பு
A. 2.4 - 3.4
B. 4.0 - 4.4
C. 4.5 - 5.5
D. 7.3 - 7.5
Answer : D.
102) ஒரு மசோதா,
நிதி மசோதாவா?
இல்லையா என்று தீர்மானிப்பவர்
v:shapes="_x0000_i1039">
A. இந்திய குடியரசுத் தலைவர்
B. லோக் சபையின் சபாநாயகர்
C. ராஜ்ய சபையின் தலைவர்
D. இந்திய தலைமை நீதிபதி
Answer : B.
103) கங்கை சமவெளியில்
காணப்படும் காடுகள்
A. சுந்தரவன காடுகள்
B. தெராய்
C. டைகா
D. ஊசி இலை காடுகள்
Answer : A.
104) இந்தியாவின் வாயில்
என்று எத்துறைமுகம்
அழைக்கப்படுகின்றது ?
v:shapes="_x0000_i1043">
A. கோழிக்கோடு
B. கொல்கத்தா
C. கொச்சின்
D. மும்பை
Answer : D.
105) 23½° வட அட்ச
ரேகை இதை குறிகின்றது
A. கடக ரேகை
B. மகர ரேகை
C. பூமத்திய ரேகை
D. துருவங்கள்
Answer : A.
106) புவி சூரியனை வலம்
வருவதால் ஏற்படும் விளைவு
A. பருவ காலங்கள்
B. பகல் மற்றும் இரவு
C. கடல் அலைகள்
D. புயல் காற்று
Answer : A.
107) விவேகாந்தர் இவரின் சீடர்
A. மகாத்மா காந்தி
B. பிபின் சந்திரபால்
C. இராமகிருஷ்ண பரமஹம்சர்
D. பாலகங்காதர திலகர்
Answer : C.
108) கங்கை கொண்டான் என்ற
பெயர் கொண்ட சோழப் பேரரசர்
A. தந்திதுர்கர்
B. ராஜாதி ராஜன்
C. வீர ராஜேந்திரன்
D. முதலாம் ராஜேந்திரன்
Answer : D.
109) உமிழ்நீரில் காணப்படும்
என்சைம் (நொதி)
A. பெப்சின்
B. லிப்பேஸ்
C. அமிலேஸ்
D. டயலின்
Answer : D.
110) கண்ணின் பிம்பம் விழும்
பகுதி எது?
A. கண்மணி
B. குருட்டுப் புள்ளி
C. விழித்திரை
D. லென்ஸ்
Answer : C.
111) பட்டியல் I- ஐ பட்டியல் II-
உடன் பொருத்தி,
கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு :
a. பூவிதழ் - 1. துணைப் பாகம் ,
b. புள்ளி வட்டம் - 2.
ஒருவித்திலைத் தாவரம்,
c. சூலகம் - 3. சீத்தாப் பூ ,
d. தொடு இதழமைவு - 4.
சூலிலை
A. (a,2),(b,1),(c,4),(d,3)
B. (a,4),(b,3),(c,1),(d,2)
C. (a,2),(b,3),(c,1),(d,4)
D. (a,2),(b,3),(c,4),(d,1)
Answer : A.
112) கண்ணின் கிட்டப்பார்வையைத்
திருத்தப் பயன்படுத்துவது
A. குழிலென்சு
B. குவிலென்சு
C. சமதள குவிலென்சு
D. சமதள குழிலென்சு
Answer : A.
113) உலர் பனிக்கட்டி எனப்படுவது
A. தண்ணீர் நீக்கப்பட்ட
பனிக்கட்டி துண்டுகள்
B. சாதாரண உப்பு சேர்க்கப்பட்ட
பனிக்கட்டிகள்
C. திட கார்பன் டை ஆக்ஸைடு
D. திடமாக்கப்பட்ட கனநீர்
Answer : C.
114) வாயு நிரப்பட்ட மின்சார
விளக்கில் உள்ள மின்இழை எதனால்
செய்யப்பட்டுள்ளது ?
A. பிளாட்டினம்
B. டங்ஸ்டன்
C. தாமிரம்
D. வெள்ளி
Answer : B

போட்டி தேர்வு

போட்டி தேர்வுகள் நெருங்க, நெருங்க பயமும்,பதட்டமும் தேர்வாளர்களுடன் இணைந்து கொள்கிறது.தேர்வு என்பது நாம் படித்ததை ஒரு குறிப்பிட்ட நாளில்,குறிப்பிட்ட நேரத்தில் நாம் சரியாக நினைவு படுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்கிறோமா? என்பதை சோதனை செய்வது தான். நாம் எப்படி படித்து இருந்தாலும் தேர்வு நேரத்தில் உடல் நிலையும்,மன நிலையும் ஒருங்கே இருந்தால் தான் நம்மால் தேர்வை சரியாக எழுத்த முடியும்.நீங்கள் எத்தனை காலமாக படித்து இருந்தாலும் தேர்வு நேரத்தில் தெளிவாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.நீங்கள் பயம் என்னும் போர்வைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளாதீர்கள்.பயத்தை துரத்தி,துணியுடன் நிமிந்து நின்று தேர்வை எதிர் நோக்குங்கள்.வெற்றியா?தோல்வியா? என்பதை கேள்வித்தாள் தான் தீர்மானிக்க போகிறது,எனவே கேள்விகளை தன்னம்பிக்கை உடன் எதிர் நோக்குங்கள்.வெற்றி உங்களை திரும்பி பார்க்கும்.

பயம் என்னும் மாயை உங்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்து மூளையின் செயல் திறனை மங்க செய்யும்.மூளையின் செயல்பாடுகள் சரியாக இருந்தால் தான் நினைவு தெளிவாக இருக்கும்.எனவே உங்களை பயத்தில் இருந்து மீட்டு கொள்ள மன பயிற்சி அவசியம்.வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்வை எதிர் நோக்காமல் ஒரு நல்ல பயிற்சி நமக்கு கிடைக்க போகிறது என்ற எண்ணத்தில் தேர்வு கூடத்திற்கு செல்லுங்கள்.எதிர்பார்ப்புகள் நம்மை பதட்டம் அடைய செய்யலாம்.எனவே நம்மால் இயன்ற அளவு நன்றாக செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் செல்லுங்கள்.

கடைசி நேர தயாரிப்புகளை கை விட்டு, தேர்வுக்கு முன்பே உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.அதை போல் இரவு முழுவதும் படிப்பதை தவிர்க்கவும்.எந்த வெற்றியும் கடைசி நேர தயாரிப்புகளுக்கு கிடைப்பதில்லை.எனவே திட்டமிட்டு படித்து இருந்தால் தேர்வு நேரத்தில் பயம் இருக்காது.எனவே உங்களின் படித்தால் தன்மை முன்னோக்கி இருந்தால் தேர்வுக்கு முன்னரே திருப்புதல் செய்ய முடியும். திருப்புதல், உங்களுக்கு ஒருவிதமான நம்பிக்கையை ஏற்பட வைக்கும்.மேலும் மாதிரி தேர்வுகள் உங்களின் நிலைபாட்டை தெளிவாக தெரிவிக்கும்.எனவே வீண் பயம்,கவலை உங்களை மனதை சோர்வாக்கி உங்களை செயல் இலக்க செய்யும்.எனவே வெற்றியா?தோல்வியா என்பதை விட இந்த தேர்வை எழுதுவதே நமது முதல் கடமை என நினைத்தால் பயம் வெளியே சென்றுவிடும்.

இறுதியாக....... பயந்தவன் முன்னேறுவதில்லை,

முன்னேறுபவன் பயத்தை எதிர்கொள்வதில்லை.

Sunday, 4 May 2014

திப்பு எனும் மாவீரன்

மே 4: திப்பு எனும் மாவீரன் - ஒரு சிறப்பு பகிர்வு!
திப்பு சுல்தான் மறைந்த தினம் இன்று .புலி என உண்மையாகவே குறிக்க வேண்டிய வீரர் மற்றும் தலை சிறந்த நிர்வாகி இவர் .எளிய வீரரராக ,வாழ்க்கையை தொடங்கி மைசூரின் மன்னர் ஆனார் ஹைதர் அலி . ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து போராடிய அவரின் மகன் தான் திப்பு சுல்தான்.
திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும்மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.
இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை தோற்கடித்து போடப்பட்ட ஒரு இந்திய மன்னர் சொல்கிறபடி ஒப்பந்தம் போடுகிற அற்புதம் திப்புவின் வீரத்தால் வாய்த்தது. ஹைதர் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே மரணம் அடைந்து விட மன்னர் ஆனார் திப்பு .அவர் ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18 வருடங்கள் போர்களத்திலேயே கழித்தார்
‘யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்’ என்று, தன் ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான். .
உலகத்தரத்திலான ராணுவத்தை உருவாக்கி இருந்தார் ; சொந்த தேதிமுறையை பின்பற்றினார், தனித்த எடை,அளவுகள் ஆகியவற்றை புழக்கத்துக்கு கொண்டு வந்தார். இன்னமும் குறிப்பாக அதுவரை இந்தியாவில் பெரிய ராஜ்யங்களை அவர் காலத்தில் ஆண்ட மன்னர்கள் முகாலயர்களின் சார்பாக ஆள்கிறோம் என்று சொல்லியபடியே ஆண்ட பொழுது தனித்து நின்று தன் பெயரில் நாணயங்களை வெளியிட்டார்.
நாசாவின் கென்னெடி விண்வெளி மையத்தின் நுழைவாயில் ஒரு ஓவியம் கொண்டிருக்கிறது -அதில் திப்பு ஏவுகணையை பயன்படுத்தி போரிடுவது சித்தரிக்கப்பட்டுள்ளது ; போர்களத்தில் ஏவுகணையை முதன்முதலில் உலகிலேயே பயன்படுத்தியவர் இவர்தான். அது இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக சென்று தாக்கும் ஆற்றல் பெற்றதாக இருந்தது .அந்த ஆவணங்கள் இன்றும் லண்டனில் பத்திரமாக உள்ளன ; அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கான்கிரீவ் ராக்கெட்களை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள்.
மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான எடுத்துகாட்டு இவர்- நூற்றி ஐம்பத்தாறு கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது . எந்த அளவுக்கு அவரின் ஆட்சியில் மத நல்லிணக்கம் நிலவியது என்பதற்கு இந்த தகவலே போதும் .கோயில்களுக்கு செலவிடப்பட்ட 2,33,959 ரூபாயில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 அளிக்கப்பட்டது இவர் ஆட்சியில்,சிருங்கேரி மடத்தலைவருடன் நெருங்கிய உறவு பாராட்டினார் . மூன்றாம் மைசூர் போரில் பரசுராம் பாவ் எனும் மராத்தியர் தலைமையிலான படைகள் நாசப்படுத்திய சிருங்கேரி ஆலயத்தை சீரமைத்துக்கொடுத்தார்.
அவர் காலத்தில் சந்தன விற்பனை தேசியமயமானது. பட்டுப்புழு உற்பத்தியை தன் ஆட்சிப்பகுதியில் அறிமுகப்படுத்தினார். கிழக்கிந்திய கம்பெனிக்கு போட்டியாக இன்னொரு நிறுவனத்தை உருவாக்கவும் முனைந்தார் கப்பல் கட்டும் தொழில்நுட்பம்,முகலாயர்களின் ஆட்சியில் இருந்து மாறுபட்ட நிர்வாகம்,இடைத்தரகர்கள் இல்லாத நிலவரி விதிப்பு என இவரின் ஆட்சியின் நிர்வாகப்பாடங்கள் ஏராளம். அந்த நிலவரி விதிப்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் பலபேர் நிலங்களை பெற்றார்கள் ; தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்த மக்கள் இந்த முறைகளால் அங்கே இடம்பெயர்வதும் நடந்தது. நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை செயல்படுத்தினார் அவர் .
ஆடம்பரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றெண்ணி திருமணத்துக்கு ஒரு சதவிகிதம் மட்டுமே வருமானத்தில் செலவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத் தடுத்து சட்டம் இயற்றியுள்ளார். கோயில்களில் இருந்த தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, அதைத் தீவிரமாகக் கண்காணித்தார். ஆங்கிலேயரோ அதே காலத்தில் வங்கத்திலும்,பீகாரிலும் கஞ்சாவை உற்பத்தி செய்து சீனாவை நாசமாக்கும் வகையில் அதை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர்.
திப்பு அதே சமயம் ஆங்கிலேயருக்கு யாரேனும் உதவுகிறார்கள் என்று தெரிந்தால் தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்கவும் யோசிக்கவில்லை. இவர் உருவாக்கிய பல்வேறு சத்தமெழுப்பும் இயந்திரப்புலி ஒன்று இன்னமும் இங்கிலாந்து ம்யூசியத்தில் பழுதடைந்து எவ்வளவோ முயற்சிக்குபின் சரி செய்ய முடியாமல் இருக்கிறது
ஆங்கிலேயரிடம் மூன்றாம் மைசூர் போரில் தோற்று அவரின் மகன்களை போருக்கான பிணையாக கொண்டு சென்றார்கள் ஆங்கிலேயர்கள்; ஆங்கில கலாசாரத்தில் அவரின் பிள்ளைகளை வளர்த்து இவரைக் காயப்படுத்தினார்கள் .
நான்காம் மைசூர் போரில் அவரின் அமைச்சர்கள் மீர் சதக் மற்றும் பூர்ணய்யா விலை போய் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. ஹைதராபாத் நிஜாமின் கடல் போன்ற படையோடு ஆங்கிலேயர் சேர்ந்த ஐம்பதாயிரம் பேர் படையை முப்பதாயிரம் பேர் கொண்ட படையோடு எதிர்கொண்டு மரணம் அடைந்தார். இவர்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வீரம் காட்டி மடியலாம்” என்று தான் சொன்னபடியே தப்பித்து ஓடாமல் போரில் தீரம் காட்டி இறந்தார் அவர். போரில் எண்ணற்ற இழப்புகள்,சூறையாடல்கள் எல்லாம் நிகழ்ந்த அந்த கணத்தில் ஒரு ஒப்பற்ற தலைவன் இறந்து போனதற்காக மைசூர் மக்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். வீர வரலாறு ஒன்று முடிவுக்கு வந்தது . திப்பு எனும் மாவீரன் மறைந்த நாள் இன்று (மே நான்கு )
- பூ.கொ.சரவணன்
Like · ·

நெப்போலியன்

மே 5: சரித்திர மாவீரன் நெப்போலியன் நினைவு தினம் இன்று..
நெப்போலியன் இறந்தது எப்படி என்கிற கேள்விக்கு வரும் பதில்கள் இவை...
நெப்போலியன் போனபார்ட் எப்படி இறந்தார்?' - ஐரோப்பா பல்லாண்டுகளாக விடை தேடிக் கொண்டு இருக்கும் கேள்வி. ஏனெனில், மைனஸ் 26 டிகிரி குளிரில் குதிரைகளின் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழ்ந்தவர். தீவுச் சிறையில் இருந்து கடலை நீந்திக் கடந்த மாவீரன் நெப்போலியன்.அவர் தானாக நோய் வாய்ப்பட்டு இறந்தார் என்றால், எப்படி நம்புவது? 'தனிமைச் சிறையில் நெப்போலியனுக்கு என்ன நடந் தது?' என்பதை அறிய யாருக்கும் எந்த க்ளூவும் அப்போது கிடைக்கவில்லை.
1816-ம் வருடத்தில் இருந்து 1821-ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை உதிர்ந்த முடிகள் ஆய்வுக்குக் கிடைத்தன. அப்போதுதான் நெப்போலியனின் முடிகளில் ஆர்சனிக் அமிலம் கலந்திருந்தது முதல் க்ளூவாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 'ஆரோக் கியமான ஒரு மனிதரின் முடியில் சோதனையில் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு ஆர்சனிக் இருப்பது இல்லை. எனவே, நெப்போலியன் மரணத்துக்குக் காரணம் விஷமாக இருக்கலாம்' என்று கண்டுபிடித்தார்கள். 'விஷம் கலந்த காற்றை அவர் சுவாசித்ததாலோ, விஷம் கலந்தவற்றை உண்டதாலோ நெப்போலியன் மரணம் அடைந்திருக்கலாம்!' என்று லக்ஸம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் வென்னிங் அறிவித்தார்.
பின்பு, நெப்போலியனின் அறை பற்றிய ஆய்வுகள் இரண்டு க்ளூக்களை அளித்தன. ஒன்று, அங்கு இருந்த ஓவியம். இரண்டாவது, அந்த அறையின் சுவரை அலங் கரித்த வால் பேப்பர்கள். இவை இரண்டிலுமே 'மெள்ளக் கொல்லும்' ஸ்லோ பாய்சன் பூசப்பட்டு இருந் தது. 'அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வண்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே இருந் ததால், விஷத்தைச் சுவாசித்துச் சுவாசித்து அவர் இறந்துவிட் டார்!' என்று ஒரு தரப்பு ஆய்வாளர் கள் சொன்னார்கள்.
'வால் பேப்பரை ஒட்டும் பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்க முடியாமல் நெப்போலியன் வால் பேப்பரைக் கிழித்துத் தின்றதால் இறந்தார்' என்று இன்னொரு தரப்பு அறிவித்தது. இன்னும் ஊர்ஜிதமான உண்மை வெளிவந்த பாடு இல்லை!
இரா.மன்னர் மன்னன்

தேசிய விருது

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61வது தேசிய விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த படம் ஆகிய 3தேசிய விருதுகளும், மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்திற்கு தேசிய விருதும், வல்லினம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டன.

‛தங்கமீன்கள்'

அதன்படி டில்லியில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா சிறப்பாக நடந்தது. இதில் தங்கமீன்கள் படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. அதற்கான விருதை இயக்குநர் ராம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் பெற்றுக்கொண்டார். இதேப்போல் இப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனாவுக்கும், பாடலாசிரியர் முத்துகுமாருக்கும் ஜனாதிபதி தேசிய விருது வழங்கினார்.

தலைமுறைகள்

இயக்குநர் பாலு மகேந்திராவின் தலைமுறைகள், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நர்கீஸ் விருதுக்கு தேர்வானது. இந்த விருதை தலைமுறைகள் படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், ஜனாதிபதி கையால் பெற்றுக்கொண்டார்.

வல்லினம்

வல்லினம் படத்துக்கு சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது ஜோசஃபுக்கு வழங்கப்பட்டது.

* சிறந்த நடிகர்

இந்தாண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி ஷாகித் என்ற இந்தி படத்தில் நடித்த ராஜ்குமார் ராவும், பெராரியாத்தவார் என்ற மலையாள படத்தில் நடித்த சூரஜ் வெஞ்சார்மூடுவும் ஜனாதிபதி கையால் தேசிய விருது பெற்றனர்.

சிறந்த நடிகை

லியார்ஸ் டைஸ் என்ற இந்தி படத்தில் நடித்த கீதாஞ்சலி தபாவுக்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்.

தாதா சாஹேப் பால்கே விருது


இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது, இந்தி மொழி கவிஞரும், பிரபல பாடலாசிரியருமான குல்ஸாருக்கு வழங்கப்பட்டது.

இதுதவிர சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, பின்னணி பாடகர், பின்னணி பாடகி உள்ளிட்டோருக்கும் ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்தார்.